Monday, March 10, 2008

மரம் நடும் ராமதாஸ் !!

ஈரோடு மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மாநாடு நடைபெற்றது. இதில், ராமதாஸ் பேசுகையில்,

  • இந்தியாவில் ஒருவன் தினமும் ஒரு மரம் நட்டுக்கொண்டு இருக்கிறான். அவன் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அது நான்தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். திண்டிவனம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி கிராமத்தில் தினமும் ஒரு மரத்தை நட்டு வருகிறார் ராமதாஸ்.
(அந்த காலத்துல வெட்டுன மரங்கள இப்போ நடுறாரா ?? இவரு குரூப் லே யே காடு வெட்டி ன்னு ஒருத்தர் இருக்காரே ??)
  • நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளான சடுகுடு, சிலம்பம் ஆகியவற்றை மறந்து மட்டைப் பந்து எனப்படும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். நான் ஒரு கால்பந்து வீரன், சத்தியமாக எனக்கு கிரிக்கெட்டை பற்றி எதுவும் தெரியாது.
அடேங்கப்பா !!! வீரரா ?? எங்களுக்கு தெரியாது சாமி.. இப்போ கிரிகெட் மேல என்ன கொலை வெறி ??
  • வரும் கல்வி ஆண்டிலேயே பள்ளிகளில் தமிழ் வழி கல்வியை 100 சதவீதம் கொண்டு வரவேண்டும். அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் கல்வி கொள்ளையர்களை உதைக்க வேண்டும்.
ஆனா இவுரு பேர புள்ளைங்க மட்டும் ஹிந்தி, இங்கிலீஷ் பள்ளியில படிப்பாங்க...ஊருக்கு உபதேசம்..உள்ளறே வேற தேசம் !!! என்ன கொடுமையா இது ?? உருப்படுமா நாடு ?

No comments: