
இந்திய அணியின் ஒலிம்பிக் கனவு பறிபோனது. ஹாக்கி ரசிகர்களின் ஆர்வம், ஆனந்தம் அத்தனையும் வீரர்களின் பொறுப் பற்ற ஆட்டத்தால் வீணானது.
ஒலிம்பிக் வாய்ப்பை நிர்ணயிக்கும் மிக முக்கியமான போட்டியில் இந்தியா 0-2 என இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. கடந்த 80 ஆண்டுகளில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்ற நம் ஹாக்கி அணி, தற்போது முதன் முறையாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற முடியாமல் போனது. தேசிய விளையாட்டு தேய்ந்து வருவதால் பொதுமக்களின் கோபத்துக்கும் ஆளாகியுள்ளது.
உலக கோப்பை மற்றும் தோகா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி மோசமாக விளையாடியதால் 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. இதையடுத்து தகுதி சுற்று தொடரில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. நேற்று அதிகாலையில் நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்தை எதிர் கொண்டது.
இங்கிலாந்து துவக்கத்திலே சூப்பராக விளையாடியது. பேரி மிடில்டன் ஆட்டத் தின் 4வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். 10வது நிமிடத்தில் ரிச்சர்ட் மேன்டெல் கோல் வித்தியாசத்தை அதிகரித்தார். முதல் 10 நிமிடங்களுக்குள் இங்கிலாந்து இரண்டு கோல் அடித்துவிட இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது.
இந்நிலையில் சர்தரா சிங் மற்றும் `சூப்பர் பார்மில்' இருக்கும் பிரப்ஜோத் சிங் ஆகியோருக்கு `எல்லோ கார்டு' வழங்கப்பட்டது இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்தது. இவர்கள் இருவரும் வெளியேற, மற்ற வீரர்கள், தங்கள் விளையாடும் நிலைகளை கொஞ்சம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது வீரர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தவறிய வாய்ப்புகள்: முதல் பாதியின் இறுதியில் (31 வது) கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை ரகுநாத் தவறவிட்டார். முதல் பாதியின் முடிவில் இங்கிலாந்து 2-0 என்ற முன்னிலையில் இருந்தது. 47வது நிமிடத்தில் அடுத்த பெனால்டி வாய்ப்பை திலீப் டிர்கே நேரடியாக இங்கிலாந்து கோல் கீப்பரை நோக்கி அடித்து, ஏமாற்றினார். இதை தொடர்ந்து கிடைத்த மூன்று பெனால்டி வாய்ப்புகளையும் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டனர். இக்னேஸ் டிர்கே தன் பங்கிற்கு இரண்டையும், சிவேந்திரா சிங் ஒரு வாய்ப்பையும் தவறவிட் டனர்.
இந்திய முன்கள வீரர்கள் அனைவரும் பொறுப்பில்லாமல் விளையாடிய போதும், கோல் கீப்பர் பல்ஜீத் சிங் இங்கிலாந்து வீரர்கள் அடித்த மூன்று பெனால்டி கார்னர்களை தடுத்து இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினார். இந்திய வீரர்கள் ஒரு பந்தைக்கூட சரியாக பாஸ்' செய்யவில்லை. வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாட தவறியதாலும், சரியான திட்டமிடல் இல்லாததாலும் ஹாக்கி வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.
சக்க்தே இந்தியா இல்ல....நக்குதே இந்தியா....
கிரிக்கெட்டுக்கு செலவு பண்ணுற காசுல பாதி பண்ணாக்க போதும்..யாரு கேக்குறா ??
Monday, March 10, 2008
இந்திய ஹாக்கி அணிக்கு பெரிய அவமானம்!*ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறாமல் தலைகுனிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment